சென்னை : சென்னை யில் பஸ்டே தொடங்கியதால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில்  கல்லூரி மாணவர்கள் ஆண்டு தோ றும் பஸ் தினம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு தடை உள்ளது. ஆனாலும், போக்குவரத்து துறை அதிகாரி கள் மற்றும் போலீசார் உதவியுடன் மாணவர்களால் பஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அயனாரவத்தில் இருந்து பெசன்ட்நகர் வரை 23சி மாநகர பேருந்து செல்கிறது. 
அயனாவரத்தில் நேற்று காலை பஸ் புறப்பட்டது. நந்தனம் கலை கல்லூரியில் படிக்கும் 70 மாணவர்கள் பேருந்தில் ஏறினர். அங்கிருந்து மாணவர்களின் ஆட்டம், பாட்டத்துடன் பஸ் வந்து கொண்டிருந்தது. எல்ஐசி அருகே பஸ் வந்தபோது, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சில் ஏறினர். பஸ்சின் கூரை மீதும் சுமார் 50 மாணவர்கள் ஏறிக்கொண்டனர். 

அங்கிருந்து பஸ்சை ஊர்வலமாக கல்லூரி வரை கொண்டு வந்தனர். பின்னால் வந்த வாகனங்களுக்கு மாணவர்கள் வழி விடவில்லை. இதனால், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அண்ணாசாலையில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகங்கள் செல்பவர்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment