Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பாரிமுனை பூக்கடையில் உள்ள தங்கசாலை (மின்ட்) தெருவில் இருந்து ராஜாஜி சாலை வரையுள்ள என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 வாரத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட மன்னார்சாமி கோவில் தெருவில் பஸ்கள் செல்லும் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. 9 கடைகள் அகற்றப்பட்டன. கடைகளின் முன்பகுதியை இடிக்க கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இன்று ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி உதவி கமிஷனர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் குவிக்கப்பட்டனர். ராயபுரம் மண்டல அதிகாரி திருமங்கை ஆழ்வார், என்ஜினீயர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பிளாட்பாரம் மற்றும் ரோட்டோரம் கடை நடத்துபவர்களுக்கு இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து இருந்ததால் அவர்கள் கடைகளை இயக்கவில்லை. சில தள்ளு வண்டிகளையும், டீ கடைகளையும் அதிகாரிகள் அகற்றினார்கள். என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் 20 தெருக்களின் முறைகளின் வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும், பொதுமக்கள் வசதிக்காகவும் கடைகள் முன்பு இருந்த போர்டுகளை அகற்றப்பட்டன.

ஆனால் தெருக்களின் உட்புறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள். ஐகோர்ட் எதிரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபார மரப்பலகை பெட்டியை மறைத்து வைத்து இருந்தனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்டிங்கர் தெரு பிளாட்பாரத்தில் 7 சிறிய கொட்டகை போடப்பட்டு இருந்தது. அதில் 2 கொட்டகை அகற்றப்பட்டது. மீதியுள்ள கொட்டகையை அகற்ற அங்கு தங்கி இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எங்களுக்கு ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் குடியிருப்பதாகவும் கூறினார்கள். இதனால் 5 கொட்டகை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து (யூரோ) போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஜெர்மனி- போர்ச்சுக்கல் அணிகள் மோதின. தொடக்கத்திலேயே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் விறுவிறுப்பாக இருந்தது.
ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி  1 கோல் போட்டு போர்ச்சுக்கலை வீழ்த்தியது
இரு அணிகளும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டனர். முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது போர்ச்சுக்கல் அணி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் லைனில் விழுந்தது. ஆனால் நடுவர் கோல் கொடுக்க மறுத்ததால் போர்ச்சுக்கல் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

2-வது பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. இதன் பயனாக 72-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்தது. சமிகெதிரா அடித்த பந்தை மேரியோ கோமஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். பதிலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஜெர்மனி அணி 2008-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்இறுதி, 2006-ம் ஆண்டு உலக கோப்பையில் 3-வது இடத்துக்கான ஆட்டம் ஆகியவற்றில் போர்ச்சுக்கலை தோற்கடித்து இருந்தது. தற்போது 3-வது முறையாக மிகப்பெரிய போட்டியில் ஜெர்மனி அணி போர்ச்சுக்கலை வீழ்த்திய உள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான நெதர்லாந்து 0-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. நெதர்லாந்து அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனியை 13-ந்தேதியும், அதே தினத்தில் டென்மார்க் அணி போர்ச்சுக்கலையும் சந்திக்கிறது. சி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனான ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati