நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான் தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இது ஆப்கன் அரசை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு,
அல்கய்தா இயக்கத்தை வேரறுப்பதற்காக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டன. அத்துடன் அங்கிருந்த தலிபான் அரசை தூக்கி எறிந்து விட்டு, புதிய அரசை ஏற்படுத்தியது. இதன்பின்னர், பாகிஸ்தானில் மறைந்திருந்த அல்கய்தா தலைவன் பின்லேடனை கண்டுபிடித்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி அவனை கொன்றுவிட்டது.  இந்நிலையில், ஆப்கனில் இருந்து படைகளை படிப்படியாக வாபஸ் பெறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கத்தாரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தலிபான் தலைவர் முல்லா ஓமரின் செயலாளர் உட்பட 8 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அப்போது, குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிக்குமாறு தலிபான் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். எனினும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment