தொழிலாளர்களுக்கான தேர்வு இல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதற்கு 40 ஆயிரம் இந்தியர்களுக்கு கூடுதலாக அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா , ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உறவை அதிகரிப்பது தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இதுதொடர்பான தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுக்கான தேர்வு இல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதற்கு 40 ஆயிரம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. இதில் பிரிட்டனில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். 

ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 12 சதவீத பங்கு வகிக்கும் பிரிட்டன், 40 ஆயிரத்தில் 30 சதவீதம் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு தேவைப்படுவதாக கூறியுள்ளது. அண்மையில் பிரிட்டன் வெளிநாட்டவர்களுக்கான விசா நடைமுறைகளை கடுமையாக்கியது. இந்நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் இந்தியர்கள் குறிப்பாக ஐ.டி. ஊழியர்கள் 6 மாதங்களுக்கு தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவே ஐரோப்பிய யூனியன் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



 அதிராம்பட்டினத்தில் தற்பொழுது எங்கு பார்த்தாலும்  த.மு.மு.கவும், SDPIயையும் இருவரும் இணைந்து ஒட்டியிருக்கும் போஸ்ட்டர்கள் பார்ப்பவருக்கு கலங்கத்தை ஏற்படுத்திவருகிறது என்றால் மிகையல்ல...
SDPI யின் நிலைகள் TNTJ மாவட்ட தலைவரோடு மோதலில் ஈடுபட்டது, உள்ளாட்சித்தேர்தலில் சம்சுதீன் என்பவர் SDPI யைப் பற்றி நோட்டிஸ் அடித்து வெளியிட்டார். தற்பொழுது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தோடு மோதலில் ஈடுபட்டதாக வட்டாரமே அதிர்ந்துபோய் கிடக்கிறது.
            இதற்கு பகிரமாக அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாங்கள் மட்டும் சும்மாவா என்பதுபோல  மார்க்கெட் பிரசசனையில் முகம் காட்டியும் உள்ளது.
           எத்தனையோ பிரச்சனைகள் அதிரை மக்களை சூழ்ந்தும், சூழ்ந்துக்கொண்டும் இருக்கிறது என்பது இங்கு வாழும் மக்களுக்கு நன்றாக தெரியும், சாதரணமாக கூறவேண்டுமானால் கேஸ் ஏஜென்ஸிஸ் கூடுதலாக ரூ. 23 வசூலித்துக்கொண்டிருக்கிறது. மின்சாரத்துறையில் லஞ்சம், தண்ணீர் பற்றாக்குறை, போதைப்பொருள் விற்பனை இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் நம் ஊரைச் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் அதிரை இயக்கங்கள் பெயருக்காய் வாயிழித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் சாதனைபுரிந்தோம் என்று சொல்லவே  அதிரையில் இயக்கங்கள் என்று சொல்வதே  உண்மையான உண்மை. அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே நோக்கமாய் செயல்படுகிறது அதிரை இயக்கங்கள். அல்லாஹ் பயந்துக்கொள்ளுங்கள்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அதிரையில் மூன்று வாலிபர்கள் கைது! ஒருவர் தலைமறைவு !


  கடந்த 26.2.12அன்று SDPI யின் சார்பாக திருவாரூரில் அகல ரயில் பாதை விசயமாக மறியல் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள சென்ற ஒருவரை சகோ.(தா மு மு க).தையுப் அவர்கள் தடுத்து நிறுத்தினார் என்ற காரணத்தால் சகோ.தையுப் அவர்களுக்கும் அதிரை SDPI இல்யாஸ் அவர்களுக்கும் சிறிது கைகலப்பு ஏற்ப்பட்டது இது தொடர்பாக இரு தரப்பிலும் அதிரை காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 
    மறுநாள்(27/2/12) (தா மு மு க). தையுப் அவர்கள் தக்வா பள்ளி அருகில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து நடுத்தெரு வழியாக பைக்கில் வந்து கொண்டு இருக்கும்போது முகமது,ரிஸ்வான்,நூருல்லாஹ்,முகமது இலியாஸ், முகத்தை முடிக்கொண்டு பைக்கில் வந்து இரும்பு பைப்பால்  கொலைவெறி தாக்குதல் நடதினார்கள்  என்று  கூறபடுகிறது.
 இதனையடுத்து நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்  அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் அவர்கள் முகமது,ரிஸ்வான்,நூருல்லாஹ் முவரையும் கைது செய்துள்ளார், முகமது இலியாஸ்,அவர்களை வலை வீசி தேடிவருகிறார்கள்.

அதிரை ப்ளஸ்க்காக 
அதிரை அமானுல்லாஹ்  

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



அதிரை அருகில்  இருக்கும்,  பேரவுரணி கிளையில்  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி தலைமையில்   நடந்த இரத்ததானம் முகாம் நடந்தது இதில் 38 
பேர் கலந்து கொண்டனர் அதில் 15 பேர் மாற்றுமத சகோதர்கள் என்பது குறிப்படத்தக்கது. அல்ஹம்த்துரில்லாஹ் TNTJ வின் இது போன்ற சமுதாய பணிகள் மேலும் தொடர இறைவனை வேண்டுகிறோம்.
    எங்களின்   பாட்சா 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சென்னை உட்பட தமிழகம் முழுவதும் புதிய மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரமாக மின்தடை அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள், மின் விடுமுறை நாளாக, முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத மின்வெட்டு நீடிக்கிறது. பகல், இரவு நேரங்களில் எப்போது மின்சாரம் வரும், போகும் என்று சொல்ல முடிவதில்லை. மின்பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அறிவிப்புகளை மின்வாரியம் நேற்று மாலையில் வெளியிட்டது. 

அறிவிப்பில் கூறியுள்ள விவரம்: தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது.  கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால் சுமார் 3000 முதல் 4000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. ஏற்கனவே இருந்து வரும் மின் உபயோகக் குறைப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளால் இப்பொழுது நிலவி வரும் பற்றாக்குறையை சரி செய்ய இயலாத நிலையில், அறிவிக்கப்பட்டதற்கும் அதிகமான மின் தடையை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனையின் பேரிலும், அவற்றை செயல்படுத்தும் வழிவகைகளைக் கருத்தில் கொண்டும், சில மின்விநியோக கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன. யாருக்கு எவ்வளவு வெட்டு: தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணிநேரம் மின்தடை.வரப்மற்ற நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 4 மணிநேரம் மின்தடை கொண்டு பட்டுள்ளது. வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மின்தடை இருக்கும். மின்தேவையின் பற்றாக்குறையை பொறுத்து மின்தடையின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தேர்வு நேரங்களில் முடிந்த அளவிற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகைகள் செய்யப்படும்.

மேற்கண்ட அனைத்து முறைகளும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மின் விடுமுறை: ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கு ஞாயிறு அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்களில் ஒரு நாள் மின்விடுமுறை அமல்படுத்தப்படும். மொத்தம் 6 நாட்களுக்கு 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மின்திட்டங்கள் தாமதம் ஏன்?: மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் அனல்மின் திட்டம்,

 1,200 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின் திட்டம், 1,500 மெகாவாட் திறன் கொண்ட தேசிய அனல் மின் கழகத்துடனான (வள்ளூர்) கூட்டுமின் திட்டம்  2,000 மெகா வாட் திறன் படைத்த கூடங்குளம் அணு மின் திட்டம், 500 திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் ஆகிய மின் திட்டங்கள் இந்த ஆண்டு இயக் கத்திற்கு வந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங் களால் தாமதமாகி வருகிறது. இத்தகைய பற்றாக்குறையை தவிர்க்க இயலாததாகி விட்டது. எனவே, அடுத்து வரும் சில மாதங்களுக்கு இத்தகைய இடர்பாடுகள் தொடரக் கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் மின்வாரியம் கூறியுள்ளது. 

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


இன்று நாட்டை சர்ச்சையில் தள்ளிகொண்டிருக்கும் அணு மின்நிலையம் அமைப்பது ஆபத்தானதா!    இல்லையா!

என்ற ஆய்வுக்கட்டுரைகள் மக்களின் வேண்டுகோள்க்கு இணங்கி அதிரை பிளஸ் சிறந்த ஆற்றலும் அணு  சக்திகளின் தொகுப்புகளை உணர்ந்தவர்களின்   கடின உழைப்பால் கட்டுரை தொகுத்துள்ளது. இந்த கட்டுரை உங்களின் சிந்தனில் தோன்றும் கேள்விகளும் பதிலை சொல்லும்படி அமைந்தால் இக்கட்டுரை அனைதுவகைகளிலும் 
சிறப்பை அமையும்.
உங்கள் கேள்விகளை பின்னுட்டத்தில் எழுதுங்கள்!!!
கட்டுரை உங்களின் கேள்விகளும் அதற்குரிய பதிலையும் தொகுத்து விரைவில் வெளிவரும்.

அணு மின்நிலையம் அமைப்பது ஆபத்தானதா!    இல்லையா!  கட்டுரை தெளிவாக தெரிவிக்கும்
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




நேரடி வீடியோ காணொளி காலை10 .30  மணிக்கு



Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati