சிவகாசி: சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இன்று பிற்பகலில் திடீர் என்று ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையே வெடித்து தரைமட்டமானது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென் அடுத்ததடுத்த அறைகளுக்கும் பரவியதில், அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும், ஆம்புலன்ஸ்களும் அந்த தொழிற்சாலை அருகே கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு சக்தியோடு பெரும் சத்ததோடு வெடிப்புகள் நடந்தன. பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டு தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர். சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த 10 தீயணைப்பு வண்டிகளும் 60க்கும் மேற்பட்ட வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்தில் இதுவரை 54 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் விருதுநகர், சிவகாசி மருத்துவமனைகளிலும், பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை நெருக்கமாக படம் எடுக்கச் சென்ற ஜீ டிவியின் நிருபர் வைத்தி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்தில் அந்த ஆலையின் 40 அறைகளும் வெடித்துச் சிதறி தரைமட்டமாகிவிட்டன. இந் நிலையில் விபத்து நடந்த இடத்தைச் சுற்றி 3 கி.மீ. தூரத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் என தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந் நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு 5 அமைச்சர்கள் விரைந்துள்ளனர். நாளை முதல்வர் ஜெயலலிதாவும் அங்கு செல்வார் என்று தெரிகிறது.
சிவகாசியில் நடந்த தீ விபத்துகளிலேயே இது தான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

indian foods aid weight loss இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.
ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்...


பச்சை மிளகாய் சாப்பிடுங்க!!! உடல் எடை குறையும்!!!

green chillies burn body fat உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.

எடை குறைய பூண்டை சாப்பிடுங்க!!!

garlic weight loss இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.
ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின் (allicin) உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுகு எண்ணெயும் உடல் எடையை குறைக்குமாம்!!!


mustard oil lose weight சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்.
அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர் அதிகம் சாப்பிட பிடிக்குமா? ஈஸியா எடை குறைக்கலாம்...

buttermilk indian drink lose weigh பொதுவாக பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.
மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்.

உடல் பருமன் குறைய கறிவேப்பிலை சிறந்ததாம்!!!

lose weight with curry leaves அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.
வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.


Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Three Youths Conned Rs 10 Lakhs Woman Posing Advocate  சென்னை: பல இளைஞர்களை காதல் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கேரளவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர்.சரவணன், அடையாறை சேர்ந்த ஏ.சரவணன், தியாகராய நகரை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அதில், பெண் ஒருவர் தங்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை பறித்து விட்டதாக புகார் கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரிடமும் ஒரு பெண் முதலில் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் நேரிலும் பலமுறை சந்தித்துள்ளார். செக்ஸ் வலையிலும் வீழ்த்தியதோடு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். சொந்த ஊரான  திருவனந்தபுரம் போக வேண்டும், வீட்டில் பணப் பிரச்சனை என்று காரணம் கூறி அவ்வப்போது பணமும் வசூலித்துள்ளார்.
மலையாளம் கலந்த தமிழில் பேசியுள்ள அந்தப் பெண்ணை இவர்கள் செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அதையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலரும் அந்தப் பெண்ணிடம் மோசம் போய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணிடம் மேலும் யாரும் மோசம் போகாமல் இருக்கவும், ஏமாந்தவர்கள் புகார் கொடுப்பதற்காகவும் அந்த பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



மதரஸத்துல் மஸ்னி வல் மஸ்ஜித்   ஏரிப்புறக்கரை கிராமம், அதிராம்பட்டினம்.  

  



Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பாக்தாத்: சிரியாவில் உள்நாட்டுக் கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 9 ஆயிரம் அகதிகள் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
சிரியாவிலிருந்து எல்லை தாண்டி அகதிகள் தொடர்ச்சியாக வருகை தருவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஈராக்கின் குர்திஷ் பிராந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மொத்தம் 9 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அகதிகளை பராமரிப்பது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் குர்திஷ் பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிகரித்து வரும் சிரிய அகதிகளை பராமரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் இது ஈராக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்றும் ஈராக் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சிரியாவில் 2011-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அது தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 President Wagon From Ambassador To Mercedes Benz கொல்கத்தா: பிரணாப் முகர்ஜியின் முகவரி மட்டுமல்ல, அவரது காரும் கூட மாறப் போகிறது. இதுநாள் வரை தனது மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரையே பயன்படுத்தி வந்த பிரணாப் முகர்ஜி இனிமேல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயனபடுத்தப் போகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டு்களாகவே அம்பாசடர் காரில் மட்டுமே பயணித்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக காரை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான காராக ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 காரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீளமான லிமோசின் காரான இந்த பென்ஸானது, பல்வேறு வசதிகளுட்ன் கூடியதாகும். டிரைவருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான பகுதி, சவுண்ட் புரூபுடன் கூடிய கண்ணாடியால் பிரிக்கப்பட்டுள்ளது.
பிடித்தமான இசையைக் கேட்கக் கூடிய வசதி உள்ளே இருக்கிறது. அதேபோல திரைப்படம் பார்க்கும் வீடியோ திரை வசதியும் உள்ளது. டிவியும் உள்ளது. செய்திகளையும் கேட்கலாம், பார்க்கலாம். அனேகமாக பிரணாப் முகர்ஜி செய்தி கேட்பதையே விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தக் காரின் பாதுகாப்பு வசதி மிகவும் சிறப்பானது. அதாவது ஏவுகணையை விட்டுத் தாக்கினாலும் கூட இது சேதமடையாதாம். அந்த அளவுக்கு பக்காவான பாதுகாப்பு வசதி இதில் உள்ளது. அதேபோல எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டாலும் ஒரு குண்டு கூட உள்ளே போகாது. கிரேனட் தாக்குதலிலிருந்தும் கூட இது தப்பி விடும். வெடிகுண்டுகள் வெடித்தாலும் கூட காருக்கு ஒன்றும் ஆகாதாம்.
இதுகுறித்து கார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், ஏகே.47, எம் 67 ஆகிய துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டாலும் காருக்கு ஒன்றும் ஆகாது. அதேபோல அதி நவீனமான அமெரிக்க தயாரிப்பு கிரெனேடைத் தூக்கி வீசினாலும் காருக்கு ஒன்றும் ஆகாது.
காரின் கண்ணாடிகள் அனைத்தும் 60 மில்லிமீட்டர் பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடிகள் ஆகும்.
காரின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 90 லிட்டர் ஆகும். காரில் ஏதாவது தீவிபத்து ஏற்பட்டு விட்டால், எரிபொருள் டேங்க் தானாகவே மூடிக் கொள்ளும்.
டயர்கள் கூட புல்லட் புரூப் கொண்டவை. அதாவது டயரைப் பார்த்து யார் சுட்டாலும் கூட டயருக்கு ஒன்றும் ஆகாது. மேலும் கார் டயரில் சுத்தமாக காற்றழுத்தம் இல்லாவிட்டாலும் கூட, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில், 30 கிலோமீட்டர் வரை தொடர்ந்து காரை ஓட்ட முடியும்.
காருக்குள் இருப்போர் ஏதாவது பிரச்சினை என்றால் எந்த இடத்திலிருந்தாலும் பேனிக் அலார்மை ஒலிக்க வைக்க முடியும். பேனிக் அலார்மை தொட்டு விட்டால், காரின் அனைத்துக் கதவுகளும் தானாகவே மூடிக் கொள்ளும். அதேசமயம், காருக்குள் இருப்போர் உள்ளே இருக்கும் தகவல் தொடர்பு வசதி மூலம் வெளியில் இருப்போருடன் பேச முடியும்.
இந்தக் காரில் 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய அட்டகாசமான ஹர்மான் கார்டன் லாஜிக்7 ஸ்டீரியோ மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக ஜிபிஎஸ் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் உள்ளது. போதிய அளவுக்கு வெளிச்சம் தரும் வகையிலான விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கார் சீட்டுகள் அருமையான லெதர் குஷன் சீட்களாகும். இந்த இருக்கைகள் மழை மற்றும் குளிர்காலத்தில் மிதமான சூட்டைக் கொடுக்கும். அதேசமயம், வெயில் காலத்தில் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவர் கேபின் தவிர குடியரசுத் தலைவர் அமரும் பகுதியில் இரண்டு வரிசை சீட்கள் உள்ளன. இரண்டு வரிசையும், எதிரும் புதிருமாக இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. அதாவது குடியரசுத் தலைவர், தன்னுடன் பயணிப்போருடன் அமர்ந்து பேசிக் கொண்டு செல்லும் வகையில் இந்த இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
காருக்குள்ளேயே சிறிய பிரிட்ஜும் உள்ளது. எனவே எத்தகைய சூடான பிரச்சினையாக இருந்தாலும் ஏதாவது கூலாக சாப்பிட்டுக் கொண்டு பேச முடியும்.
இப்படி சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காரின் விலை ஜஸ்ட் ரூ. 12 கோடிதான். இதுவரை பிரணாப் முகர்ஜி பயன்படுத்தி வந்த புல்லட் புரூப் பொருத்தப்பட்ட அம்பாசடர் காரின் விலை ரூ. 10 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

போபால்: ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது என்று மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைசச்ர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு சிறுமியை நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் பேஷன், வாழ்க்கை முறை மற்றும் நடத்தை இந்திய கலாச்சாரத்தின்படி இருக்க வேண்டும்.
ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் வகையில் உள்ளன என்றார்.
விஜயர்வர்கியா இது போன்று கருத்து தெரிவிப்பது இது ஒன்றும் முதல் முறையன்று. அவர் தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே பெண்களின் ஆடைகள் பற்றி பேசுவதாகக் கூறப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Pranab Mukherjee Wins Presidential Election டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.
இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார்.சங்மாவுக்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்பு
நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டுவரை பிரணாப் முகர்ஜி பதவி வகிப்பார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

மூணாறு:கேரள சிறுமி கற்பழிக்கப்பட்டதை மறைக்க அவரது பெற்றோரிடம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பில் பல லட்ச ரூபாய் பேரம் பேசியது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

கேரளா, பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் - சுசிலா தம்பதி மகள் மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில், வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், அங்கு கற்பழித்து கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ராஜ்குமார், உதவியாளர் அன்பரசன், மகேந்திரனை, கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
மேகலாவை தமிழகத்திற்கு அழைத்துச் சென்ற ஏஜன்டுகள் பாம்பனார் குமாரபுரம் காலனி பன்னீர்செல்வம், 48, குமுளி செங்கரை விஜயகுமார், 36, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மற்றும் மற்றொரு ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேகலாவின் பெற்றோரை சந்தித்து, "வேலைக்கு அனுப்பினால் அதிக தொகை கொடுப்பதாக'க் கூறியுள்ளனர். இதற்காக விஜயகுமார், பன்னீர்செல்வத்திற்கு தலா 3,000 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது. கொலைக்கு பின், ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார்.

மேகலா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த போது, சம்பவத்தை மறைக்க, அவரது பெற்றோரிடம், பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதும், விசாரணையில் தெரிந்துள்ளது.

இதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பன்னீர்செல்வத்தை கேரள மாநிலம் பீர்மேடு பகுதியில் கைது செய்த போலீசார், அவரை பெரம்பலூருக்கு கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

லாகூர்:குழந்தை பெரிய முகத்துடன் பிறந்ததால், அதை உயிரோடு புதைக்க முயன்ற தந்தையை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கனிவால் நகரத்தை சேர்ந்தவர் சந்த்கான். இவருக்கு, ஏற்கனவே, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம், இவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை, பெரிய முகத்துடன் இருந்ததால், அதை அவலட்சணமாக கருதிய சந்த்கான், மனைவிக்கு தெரியாமல், குழந்தையை எடுத்துச் சென்று புதைக்க முடிவு செய்தார்.மசூதிக்கு எடுத்துச் சென்று, இறுதிச் சடங்கு செய்த போது, குழந்தை திடீரென அழுதது. இதைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் போலீசுக்கு புகார் செய்தனர். "குழந்தை அவலட்சணத்துடன் பிறந்ததால், அதை புதைக்க நினைத்தேன்' என, சந்த்கான் தெரிவித்துள்ளார். அவர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 கொழும்பு:இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர். விடுதலை புலிகளுடனான சண்டை, முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன.இதற்கிடையே, தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர, இந்தியா உறுதியளித்தது. இதன் ஒரு கட்டமாக, யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் மூன்று மாவட்டங்களில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.இந்நிலையில், வடகிழக்கு மாகாணங்களில், 43 ஆயிரம் வீடுகளை 1,500 கோடி ரூபாய் செலவில், கட்டித் தருவதற்குரிய ஒப்பந்தம், கடந்த 13ம் தேதி, கொழும்பில் கையெழுத்தானது. இந்திய தூதர் அசோக் காந்தா, இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷே ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒளிவு மறைவற்ற முறையில், பயனாளிகளுக்கு, வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய தூதரகத்தின் மூலம், உரிய பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்பட உள்ளதாக, இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

லண்டன்:லண்டன் தபால் அலுவலகத்தில், 3.5 கோடி ரூபாய் திருடி விட்டு, ஊமையாக நடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி இந்தியர் அம்ரித்பால் மெகாத்,26. கடந்த 2008ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, மான்செஸ்டரில் உள்ள தபால் அலுவலகத்தில், மற்றொரு பெண்ணின் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி, 3.5 கோடி ரூபாய் வரை திருடியுள்ளார். இதையடுத்து, 2009ம் ஆண்டு, இவர் பிடிபட்டார். ஆனால், பிடிபட்ட நாள் முதல் கொண்டு, இவர் ஊமையாகவே நடித்துள்ளார். இதனால், இவரது வாக்குமூலத்தை கோர்ட்டில் பதிய முடியாமல் போனது.பஞ்சாப் மொழி தெரிந்த மனோதத்துவ நிபுணர் மூலம், இவருடன் பேசச் செய்து, கோர்ட்டில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பின், முதன் முறையாக, அவர் நேற்று முன்தினம் கோர்ட்டில் பேசினார். "கடவுள் என்னை ஊமையாக்கி விட்டார்' என, நீதிபதியிடம் அம்ரித்பால் கூறினார்.ஆனால், அவரது பித்தலாட்டத்தை ஏற்காத நீதிபதி, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பு கூறினார். இரண்டு மாத காலத்துக்கு, மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், அம்ரித்பாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ஈரோடு:"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில் அறிமுகம் செய்தால், மறு வாரமே, அதே மாடல்களில், நெட், விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்ட, சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன.இந்நிறுவனங்களின் மொபைல் போன் ஒன்றின் விலை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு வசதியுடன் கூடிய, சீன மொபைல், வெறும், 1,000 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிகப்படியான மாடல்கள், குறைந்த விலை என்பதால், இதையே மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்."கீ பேட்' இல்லாமல், "டச் ஸ்கிரீன்' மாடலில் மொபைல் போன்கள், விற்பனைக்கு வந்துள்ளன. கம்பெனி தயாரிப்புகளைப் போல வசதியும், இளைஞர், சிறுவர்களைக் கவரும் வகையில், ஆபாச விளையாட்டுகளுடனும் விற்பனை செய்கின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமான விளையாட்டுகள், இந்த போன்களில் உள்ளன.ஒரு பெண், முழுமையான ஆடையுடன் நிற்கும் படம் உள்ளது. "டச் ஸ்கிரீனில்' கை வைத்து சுரண்டினால், அப்பெண் போட்டுள்ள ஆடை, கொஞ்சம் கொஞ்சமாக உரிகிறது. ஒரு கட்டத்தில், "டூ பீஸ்' ஆடையுடன் பெண் இருப்பது போல படம் வருகிறது.மற்றொரு படத்தில், பெண் ஒருவர் நிற்கிறார். டச் ஸ்கிரீனில் இருந்து, நாம் காற்றை ஊதினால், அந்த பெண்ணின் ஆடை மேல் நோக்கி பறக்கிறது. வெட்கத்தில் அந்தப் பெண் கத்தும் சத்தத்தை மொபைல் வெளிப்படுத்துகிறது.
இது போன்று பல விளையாட்டுகளை, இணையதளத்தில் இருந்து, மொபைல் போனில், பதிவு இறக்கம் செய்து, விற்பனை செய்கின்றனர்.
கம்பெனி தயாரிப்புகளில், இது போன்ற ஆபாச விளையாட்டுகள் இல்லை; சீன போன்களில் மட்டுமே உள்ளது. கடைக்காரர்கள், வியாபார உத்திக்காக, இதுபோன்ற பதிவு இறக்கத்தை செய்துள்ளனர். தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி, தங்களின் சாதாரண மொபைல்களைக் கொடுத்து, இது போன்ற, "டச் ஸ்கிரீன்' மொபைல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சைபர் கிரைம் போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

இதயநோயை தடுக்கும் வால்நட்!

Walnuts Lower Cholesterol Other Cv  ‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


வேலூர்: வேலூரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றார். ஆனால் அதில் 3 குழந்தைகள் இறந்துவிட்டன.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் மனைவி பானுப்பிரியா. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று காலை பிரசவ வலி எடுத்ததையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குமரேசன் சேர்த்தார்.
அங்கு சுகப்பிரசவத்தில் பானுப்பிரியாவுக்கு அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அடக்கம். ஆண் குழந்தைகள் 740 மற்றும் 610 கிராம் எடையுடன் பிறந்தன. பெண் குழந்தைகள் 540 மற்றும் 590 கிராம் எடை கொண்டதாக இருந்தன. குழந்தைகள் எடை குறைவாக பிறந்ததால் பிறநதவுடன் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை இறந்தன. 740 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை மட்டும் இன்குபேட்டரில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்த செய்தி அறிந்த குமரேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து டாக்டர் கூறுகையில்,
ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தைகளை பெற்றெடுப்பது அரிதாகும். கடந்த வாரம் கூட ஒரு பெண் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்துவிட்டன.
கருவறையில் போதிய இடம் இல்லாததால் குழந்தைகள் வளர முடியாமல் எடை குறைவாகப் பிறக்கின்றன. எனவே, கர்ப்பிணிகள் துவக்கத்திலேயே ஸ்கேன் செய்து பார்த்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கோலாலம்பூர்: மலேசியாவில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் இறந்த பச்சிளம்குழந்தையின் உடல் இருந்த தனது சக மாணவியின் பையை 17 மணிநேரமாக வைத்திருந்துள்ளார். அவருக்கு பையில் குழந்தையின் உடல் இருந்தது தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. இதையடுத்து அவர் குழந்தையின் உடலை புத்தகப்பையில் வைத்து தன்னுடன் படிக்கும் 16 வயது மாணவி ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவரும் பைக்குள் புத்தகம் தான் இருக்கிறது என்று நினைத்து அந்த பையை 17 மணிநேரம் வைத்துள்ளார்.
இதற்கிடையே பிரசவித்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் நடந்ததையெல்லாம் தெரிவித்துவிட்டார்.
இது குறித்து ஏசிபி மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புத்தகப்பையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தன் தோழி கொடுத்த பையில் இருந்தது குழந்தையின் சடலம் என்பது தெரிய வந்ததும் அந்த மாணவி பீதியடைந்தார். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அது பிறந்தவுடன் தலையில் காயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் இறந்தது என்பது தெரிய வந்துள்ளது என்றார்.
மலேசியாவில் சிறுமிகள் இதுபோன்று கர்ப்பமாகி குழந்தையைப் பெற்று அதை எங்காவது போடுவது தொடர்கதையாகிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 31 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளன. அதில் 10 குழந்தைகள் உயிருடன் உள்ளன. 19 குழந்தைகள் இறந்துவிட்டன. மேலும் 2 குழந்தைகளின் நிலை குறித்து மருத்துவமனைகள் இன்னும் தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அரசு அதிகாரி ஹர்ஜித் சிங் தெரிவித்தார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

India More Than 12 Lakh Candidates Sit Tnpsc Group 4 Tomorrow  சென்னை: தமிழகத்தில் அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
குரூப் 4 மூலம் வரி வசூலிப்பாளர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோகிராபர், டைப்பிஸ்ட், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக அனைவரும் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைத் தட்டி விட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை தமிழகத்தில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் விரிவான முறையில் ஏற்பாடுகளையும் தேர்வாணையம் செய்துள்ளது.
தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் அரசுத் தேர்வாணைய தேர்வை எழுதப் போவது இதுவே முதல் முறை என்பதால் இந்த 12 லட்சம் பேரின் குடும்பங்களும் பெரும் டென்ஷனுடன் காத்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்!


காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
குழந்தைப்பேறு
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள். கணவனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.
எல்லைகள் வகுத்துக்கொள்ளுங்கள்
கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும். புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் அதுவே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
பண விவகாரம்
பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள். வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவரும் முன்பே பேசி முடிவுக்கு வந்து விடுவது நல்லது.
செலவழிக்கும் பழக்கம்
பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திருமணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவாகப் பேசி விடுங்கள். வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.
தெளிவுபடுத்துங்கள்
கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம்.
நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந்தால் அங்கே பிரச்சினை எழலாம். நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்து வரும் என்று தெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 பெங்களூர்: உலக அளவில் இப்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் கொடுப்பது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக பேரணிகள் நடத்துகிறார்கள், கூட்டம் போடுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக கிளப்களை ஆரம்பிப்பது அதிகரித்து வருகிறதாம்.
முன்பெல்லாம் ரகசியமாக செயல்பட்டு வந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இப்போது பல்வேறு உரிமைகளைக் கோரும் அளவுக்கு பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்ட மாணவ, மாணவியருக்கு ஆதரவாக கிளப்களைத் தொடங்கி வருகிறார்களாம்.
டெல்லி, புனே போன்ற நகரங்களில் இதுபோன்ற கிளப்கள் ஏற்கனவே உள்ளன. இந்த நிலையில் பெங்களூரில் 3 பேர் சேர்ந்து ஒரு கிளப்பை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிப்பவர்கள். 9 மாதங்களுக்கு முன்பு இவர்கள் கிளப் தொடங்கினர். இதுகுறித்து அவர்களில் ஒருவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கைப் பழக்கம் கொண்ட பெரியவர்களுக்கு மட்டுமே இதுவரை கிளப்கள் உள்ளன. ஆனால் மாணவ, மாணவியருக்காக அது தொடங்கப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கத்தான் நாங்கள் தொடங்கியுள்ளோம். நாங்கள் ஓரினச் சேர்க்கைக்கும், அதில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஆதரவாக இருப்போம் என்றார்.
இதேபோல பல கல்லூரிகளில் அமைதியான முறையில் இப்படிப்பட்ட கிளப்கள் செயல்பட்டு வருகின்றனவாம். விளம்பரம் இல்லாத வகையில்,இவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனராம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Sl Army Claims Big Arms Cache Kilinochi  கிளிநொச்சி: விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியில், பெரும் ஆயுதக் குவியலை கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி. ஈழத்தில் உள்ள இந்த நகரானது தற்போது பெரும் சுடுகாடாக மாறிப் போய் விட்டது. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் நகரமே சின்னாபின்னமாகி விட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியலைக் கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த ஆயுதங்களில் 2 லட்சம் ரவுண்டு வரை சுடக் கூடிய துப்பாக்கி குண்டுகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்த மேல் விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Nithyanantha Is Kodaikanal With His Supporters  கொடைக்கானல்: நித்தியானந்தா தனது ஆதரவாளர்கள் புடை சூழ கொடைக்கானலுக்கு வந்து ஒரு ஹோட்டலில் 60 அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் ஹோட்டலை விட்டு அனுமதி பெறாமல் வெளியேறக் கூடாது என்று போலீஸார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. அங்கு யாரும் இல்லை. நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்திற்குள் புகுந்துள்ளனர். ஆங்காங்கு தங்கியுள்ளனர். நித்தியானந்தாவுடன் ஏராளமானோர், மதுரை ஆதீன மடத்தி்ல தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் கொடைக்கானலுக்கு கிளம்பி வந்துள்ளார் நித்தியானந்தா. அத்தனை பேரும் நள்ளிரவுக்கு மேல் மலை ஏறி வந்தனர். பின்னர் அட்டுவம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவ்வளவு பேரும் ரூம் எடுத்துத் தங்கினர். மொத்தம் 60 அறைகளை அவர்கள் புக் செய்துள்ளனராம். ஜூலை 22ம் தேதி வரை இங்குதான் அத்தனை பேரும் முகாமிடப் போகிறார்களாம்.
எதற்காக இந்த திடீர் தங்கல் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ யோகா முகாம் என்று கூறப்டுகிறது.
இந்த ஹோட்டலுக்குள் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் ஹோட்டலில் தங்கியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஹோட்டல் வாட்ச்மேன் தவிர நித்தியானந்தாவின் கட்டுமஸ்தான சில ஆதரவாளர்களும் வாசலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் கூட்டமாக நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் கொடைக்கானல் வந்திருப்பதால், போலீஸ் அனுமதி இல்லாமல் யாரும் வெளியே போகக் கூடாது என்று நித்தியானந்தா தரப்புக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளதாம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 மதுரை: பிளஸ்டூவில் 1100 மார்க் வாங்கி, பொறியியல் படிப்பில் சேர காத்திருக்கும் ஒரு மாணவன், தனது ஆசிரியைகள் உள்பட ஏராளமான பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், செல்போனில் ஆபாசமாகப் பேசியும் போலீஸில் சிக்கி சிறுவர் சிறைக்குப் போயுள்ள பரிதாபம் நடந்துள்ளது மதுரையில்.


மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவன் மணிகண்டன். பிளஸ்டூ முடித்துள்ளான். பிளஸ்டூ தேர்வில் 1100 மதிப்பெண் வாங்கியுள்ளான். நன்கு படிக்கக் கூடிய மாணவன். யாருடனும் அதிகம் பேச மாட்டானாம், வீட்டில் கூட எப்போதும் தனது அறைக்குள்ளேயே முடங்கியிருப்பானாம். இதனால் ஏதோ படிக்கிறான் போல என்று நினைத்து வீட்டில் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவின் செயல் இன்று அவனது குடும்பத்தை மட்டுமல்லாமல், அந்த மாணவனின் பெருமையையும் தலைகுப்புற கவிழ்த்துப் போட்டு விட்டது.

50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ளான் மணிகண்டன்.
அவன் ஆபாசமாக பேசியது, எஸ்.எம்.எஸ் அனுப்பியவர்கள் பட்டியலில் அவனது பள்ளி ஆசிரியைகள் சிலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனது பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளான் மணிகண்டன்.மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகவும் பேசியுள்ளான். இவனது தொல்லை தாங்க முடியாமல்ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில் மாணவன் மணிகண்டன் வசம் செல்போன் இருப்பதும், அவன்தான் இப்படிச் செய்கிறான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவனைக் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர் போலீஸார். அவன் பயன்படுத்தி வந்த போனிலிருந்து யார் யாருக்கெல்லாம் அழைப்பு போயிருக்கிறது என்பதை ஆராய்ந்தனர். அதில் பெரும்பாலான எண்கள் பெண்கள் வைத்திருந்ததாகும். அவர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவன் மணிகண்டனின் முகவரியைக் கண்டுபிடித்த போலீஸார், முதலில் மணிகண்டனின் செல்போனுக்கு ஒரு ஆண் கான்ஸ்டபிள் மூலம் மிஸ்ட் கால் கொடுத்தனர். இதையடுத்து அந்த எண்ணை அழைத்த மணிகண்டன், எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பதைக் கூட உணராமல், எடுத்த எடுப்பிலேயே ஆபாசமாக பேச ஆரம்பித்தான். தான் போலீஸ்காரருடன் பேசுகிறோம் என்று தெரியாமல் அவன் பேசினார். இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு மணிகண்டன் வீடு புகுந்தனர் போலீஸார்.
அவனைக் கைது செய்த போலீஸார், அவனது அறையை சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்து ஒன்பது சிம் கார்டுகள், 2 மொபைல் போன்கள், 2 மெமரி கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கூறுகையில், முதலில் நாங்கள் அவனது அறைக்குள் போக முயன்றபோது எங்களைத் தடுத்து நிறுத்தி கத்தினான் மணிகண்டன். அறைக்குள் வந்து சோதனை போட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அழுதான். இருப்பினும் அவனை சமாதானப்படுத்தி விட்டு சோதனை போட்டோம்.
நன்கு படிக்கக்கூடிய இந்த மாணவன், மிகப் பெரிய கிரிமனல் ஒருவன் செயல்படுவது போல பல்வேறு சிம் கார்டுகள், செல்போன்கள், மெமரி கார்டுகளை வைத்துக் கொண்டு இப்படி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்றார்.
மணிகண்டனின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். மிகவும் அமைதியான பையன், யாருடனும் அதிகம் பேச மாட்டான், பழக மாட்டான். அவன் இப்படிச் செய்திருப்பான் என்பதை நம்பவே முடியவில்லை என்று கூறி அவர்கள் அழுதனர்.
மணிகண்டன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், இது எனக்குப் பொழுதுபோக்கு. நான் பாட்டுக்கு ஏதாவது எண்ணைப் போடுவேன். பெண்கள் வந்தால் ஆபாசமாக பேசுவேன், எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
எனது பள்ளியிலிருந்து ஆசிரியைகளின் செல்போன் எண்கள் கிடைத்தன. அதை கொண்டு அவர்களுக்கும் அனுப்பினேன் என்று கூறியுள்ளான்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


  காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொதிக்கும் சாம்பார் சட்டிக்குள் விழுந்த 4 வயது சிறுமி உடல் வெந்து பரிதாபமாக பலியானாள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். அவரது 4 வயது மகள் பத்மா. கடந்த 28ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பத்மா வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் சமையல் முடித்து கொதிக்கும் சாம்பார் சட்டியை கீழே இறக்கி வைத்திருந்தனர்.
ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த பத்மா சாம்பார் சட்டிக்கு அருகிலும் சென்றாள். அப்போது எதிர்பாராவிதமாக சாம்பார் சட்டிக்குள் சிறுமி விழுந்தாள். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பதறிய பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பத்மா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பாரிமுனை பூக்கடையில் உள்ள தங்கசாலை (மின்ட்) தெருவில் இருந்து ராஜாஜி சாலை வரையுள்ள என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 வாரத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட மன்னார்சாமி கோவில் தெருவில் பஸ்கள் செல்லும் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. 9 கடைகள் அகற்றப்பட்டன. கடைகளின் முன்பகுதியை இடிக்க கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இன்று ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி உதவி கமிஷனர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் குவிக்கப்பட்டனர். ராயபுரம் மண்டல அதிகாரி திருமங்கை ஆழ்வார், என்ஜினீயர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பிளாட்பாரம் மற்றும் ரோட்டோரம் கடை நடத்துபவர்களுக்கு இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து இருந்ததால் அவர்கள் கடைகளை இயக்கவில்லை. சில தள்ளு வண்டிகளையும், டீ கடைகளையும் அதிகாரிகள் அகற்றினார்கள். என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் 20 தெருக்களின் முறைகளின் வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும், பொதுமக்கள் வசதிக்காகவும் கடைகள் முன்பு இருந்த போர்டுகளை அகற்றப்பட்டன.

ஆனால் தெருக்களின் உட்புறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள். ஐகோர்ட் எதிரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபார மரப்பலகை பெட்டியை மறைத்து வைத்து இருந்தனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்டிங்கர் தெரு பிளாட்பாரத்தில் 7 சிறிய கொட்டகை போடப்பட்டு இருந்தது. அதில் 2 கொட்டகை அகற்றப்பட்டது. மீதியுள்ள கொட்டகையை அகற்ற அங்கு தங்கி இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எங்களுக்கு ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் குடியிருப்பதாகவும் கூறினார்கள். இதனால் 5 கொட்டகை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

14-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து (யூரோ) போட்டி போலந்து, உக்ரைனில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஜெர்மனி- போர்ச்சுக்கல் அணிகள் மோதின. தொடக்கத்திலேயே இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் விறுவிறுப்பாக இருந்தது.
ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி  1 கோல் போட்டு போர்ச்சுக்கலை வீழ்த்தியது
இரு அணிகளும் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டனர். முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது போர்ச்சுக்கல் அணி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் லைனில் விழுந்தது. ஆனால் நடுவர் கோல் கொடுக்க மறுத்ததால் போர்ச்சுக்கல் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.

2-வது பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. இதன் பயனாக 72-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்தது. சமிகெதிரா அடித்த பந்தை மேரியோ கோமஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். பதிலுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியால் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஜெர்மனி அணி 2008-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்இறுதி, 2006-ம் ஆண்டு உலக கோப்பையில் 3-வது இடத்துக்கான ஆட்டம் ஆகியவற்றில் போர்ச்சுக்கலை தோற்கடித்து இருந்தது. தற்போது 3-வது முறையாக மிகப்பெரிய போட்டியில் ஜெர்மனி அணி போர்ச்சுக்கலை வீழ்த்திய உள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான நெதர்லாந்து 0-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. நெதர்லாந்து அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனியை 13-ந்தேதியும், அதே தினத்தில் டென்மார்க் அணி போர்ச்சுக்கலையும் சந்திக்கிறது. சி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனான ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 
இந்நாட்டு மக்கள் அனைவர் மீதும் தொடுக்கப்பட்ட போர் இந்தப் போரைத் தொடுத்தது சீனாவோ, பாகிஸ்தானோ வேறு எந்த பயங்கரவாத இயக்கங்களோ அல்ல. நம் வரியை வாங்கி நம்மை நிர்வாகம் செய்வதாகவும் நாங்கள் மக்கள்நல அரசாங்கத்தை (Welfare State) நடத்திவருவதாக தம்பட்டம் அடித்துவரும் நமது மத்திய அரசுதான் இந்த இரக்கமற்ற போரைத் தொடுத்துவிட்டது. ஏழைகள், உழைப்பாளிகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசின் அறிவிப்பு.
சர்வதேச ஏமாளிகளா மக்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்திய மக்களாகிய நாம் சர்வதேச ஏமாளிகள் என்பதை சொல்லாமல் தம் செயலில் நிரூபித்துக் காட்டியுள்ளது மக்கள்(!) நல மத்திய அரசு. பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.54 ரூபாய் அதிகரிக்கப்பட்டு மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக் கொண்டுள்ளது மன்மோகன்சிங் அரசு. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ண யித்துக் கொள்ளலாம் என்ற மக்கள் விரோத, மூடத்தனமான முடிவின் மூலம் அரசாங்கம் தங்கள் குடிமக்களின் மீது தீராத வேதனையை ஏவிவிட்டுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 106 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 90 டாலர்களாக குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டியதுதானே நியாயம்? ஆனால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம் அல்லவா? டாலர் பொருளாதாரத்தினால் விளைந்த தீமை!
சர்வதேச எண்ணெய் சந்தையை டாலர் பொருளாதாரத்தினால் நிர்ணயித்ததால் மிகப் பெரிய தீங்கினை நாம் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. முன்னர் 49 பாய் மதிப்பிலான ஒரு டாலர் இப்போது 56 ரூபாய்க்கு மேலே எகிறியுள்ளது. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய்க்காக அதிக அளவு டாலரை செலுத்த வேண்டிய நிலையில் அதனால் ஏறும் விலை ஏற்றம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் விடிகிறது. ஒண்ணும் தெரியல... ஒரு இழவும் புரியல...
ஒண்ணும் தெரியல, ஒரு இழவும் புரியல... இவ்வாறு மனதிற்குள் பாடிக்கொண்டிருப்பவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திட்டக்குழு துணைத் தலைவர் (எல்லாரும் திட்டுவதற்கென்றே போடப்பட்ட கமிஷன் போலும்) மாண்டெக்சிங் அலுவாலியா இந்த மூவரும்தான் இவ்வாறு புலம்பித் தள்ளிக்கொண்டிருப்பார்கள்.
ஊரு உலகமெல்லாம் குறைந்த விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலை நமக்கு மட்டும் ஏன் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது? டாலரின் மதிப்பு ஏன் திடீரென ஏறியது?
இந்திய அரசு ஏற்றுமதியை விட இறக்குமதியைத்தான் அதிகம் செய்கிறது. இந்த இறக்குமதிக்கான நாணயம் டாலரில்தான் மதிப்பிடப்படுகிறது.
இறக்குமதிக்காக இந்திய அரசு செய்யும் செலவில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை யில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்திய அரசால் பெட்ரோல் டீசல் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியவில்லை. மாற்று எரிபொருளுக்கான புதிய முயற்சிகளுக்கும் வழியில்லை. ரூபாயின் சரிவைத் தடுக்க இறக்குமதியைக் குறைக்கவும் முடியவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கவும் வழியில்லை. இப்படி இல்லை என்ற சொல்லை மட்டுமே ஏகப்பட்ட ஸ்டாக் வைத்திருக்கும் மத்திய அரசைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
ஏற்கமுடியாத காரணங்கள் இந்தியா பெட்ரோல், டீசலை வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. கச்சா எண்ணெயைத் தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால் விலையை மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல் சர்வதேச பெட்ரோல் டீசல் விலைகளின் அடிப்படையில் செய்கிறோம். இதை எந்த அடிப்படையில் நியாயம் என ஏற்றுக்கொள்ள முடியும்?
மும்பையிலும், அஸ்ஸாமிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்காக போக்குவரத்துச் செலவு இல்லாமல் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் கொண்டுபோய் சேர்ப்பது எதற்காக? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான செலவுகளைக்கூட அந்தப் பண முதலைகளிடம் வசூலிக்காமல் இருக்கும் ஏமாளித்தனம் (அல்லது) கயமைத்தனம் மத்திய அரசுக்குத் தேவையா? சாதாரண சிறிய தொழில் முனைவோர் வரி ஏய்ப்பு செய்தால் பாய்ந்து பிராண்டும் அரசு இயந்திரங்கள், பண முதலைகளிடம் இறக்குமதி செய்யும் செலவுத் தொகையை வசூலிக்காமல் விட்டுக்கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
ஐந்து லட்சம் கோடி மானியம் பெறும் எண்ணெய் நிறுவனங்கள் இந்நாட்டின் ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களாலும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினாலும் மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் பல ஆயிரம் கோடிகளை செலவழிப்பதால் நாட்டிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என நீட்டி முழக்கும் அரசியல்வாதிகளும், பன்னாட்டு அடிமைகளாக மாறியுள்ள சில ஊடகங்களும் ஒரு உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரி யாமலே மறைத்திருக்கிறார்கள். அதாவது நாட்டின் ஏழை மக்களை உறிஞ்சி அந்த ரத்தத்தையே எண்ணெயாக விற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியமாகவும், வரிச்சலுகையாகவும் கொட்டி அழுதுவிட்டு, அதே எண்ணெய் நிறுவனங்களை விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும் என உரிமையும் வழங்கிவிட்டு ஆள்வோர் நாடகம் ஆடுவதை நாட்டு மக்கள் எத்தனைக் காலம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட போர், உக்கிரமமான போர் என்பதில் சந்தேகமே இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா? மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறது. மக்களை ஏமாற்றும் முறையிலான கணக்கீட்டு முறையினால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கில் காட்டப் படுகின்றன. இது அப்பட்டமான பொய் என மத்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக நிரூபித்துள்ளன.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் உள்பட அனைத்தும் வெளிநாட்டில் உற்பத்தி யாகும் கச்சா எண்ணெய் போன்றே இறக்குமதி வகையில் காட்டப்படும் ஏமாற்றுக் கணக்கு. மேலும் கப்பலில் கொண்டு வரும்போதும், கடலில் கசிந்த எண்ணெய் ஏற்றும்போதும் இறக்கும்போதும் ஏற்படும் கழிவு மற்றும் செலவு கணக்கு எல்லாவற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் கிடைக்கும் வண்ணம் பொய்க்கணக்கு காட்டப்படுகிறது. அரசு அமைத்த குழுக்களே உண்மைகளை வெளியிட்ட பிறகும் அதனை வெளி யிட ஏன் இன்னும் தாமதம்? போட்டி போட்டு விலை உயர்த்தும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்தி வரி, மேல் சரி போன்றவை 32 சதவீதம் ஆகும். மாநில அரசின் விற்பனை வரி 27 சதவீதம் ஆகும். இவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள் என்பதை யாரால் மறுக்க முடியும். கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு லாபம் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்ரோல் இந்திய அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டிவருவது என்பதை கடந்த நிதியாண்டு வரி வருவாய் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரிகளை மத்திய அரசு பெருமளவு குறைத்துவிட்டால் மக்களை விலை உயர்வு என்ற துயரில் இருந்து மீட்க முடியும். பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இதற்குத் தீர்வு காண முன்வரும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 28 எண்ணெய் எரிவாயு கிணறுகள் உள்ளன. இந்த இடங்களில் இருந்து வருடந்தோறும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் பெட்ரோலும், 1 லட்சத்து 20 ஆயிரம் டீசலும் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தேவையான பெட்ரோல் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் என்றும் தெரியவந்துள்ளது. இதைப்போன்று இந்திய நாட்டிற்குள்ளே கிடைக்கும் கச்சா எண்ணெய் கூட இறக்குமதியான கணக்கில் காட்டும் கயமைத்தனத்தை என்னவென்பது? பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. ஏற்றப்பட்ட விலை உயர்வு உடனடியாக குறைக்கப்பட வேண்டும். மக்கள் மீது மென்மேலும் துன்பச்சுமைகளை ஏற்றும் எதேச்சதிகார அதிகார வர்க்கத்தை வாக்குச் சீட்டின் வழியாக கணக்குத் தீர்க்க காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள்.

- சில உடனடி தீர்வுகள்
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவகைகளைக் குறைத்தால் விலை குறைக்க முடியும்.
பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்காகவும், உள்நாட்டு பணமுதலைகளுக்காகவும் அடிக்கடி வரிவிலக்கு என்ற பெயரில் அள்ளிக் கொடுக்கும் அரசுகள் மக்களுக்காக எப்போதாவது இந்த வரிச்சுமையைக் குறைத்து விலைகுறைக்க முன்வர வேண்டும்.
இதற்கு முன்பு கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் குறைந்தபோது மத்திய அரசு விலையைக் குறைக்காதது ஏன்? அந்த லாபம் எல்லாம் எங்கே போனது?
நம்மை விட சின்னஞ்சிறு மாநிலமான கோவா முற்றிலுமாக வாட் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயைக் குறைத்துள்ளது. இதனால் கோவா, விலை குறைவைப் பெற்று மகிழ்வதுடன் அதிகப்படியான 5.50 காசு குறைவினைப் பெற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
கோவாவைப் போல் தமிழக அரசும் வரியினைக் குறைத்து பெட்ரோல் கூடுதல் விலை உயர்வை சரிக்கட்ட முயற்சி எடுத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் தமிழக முதல்வரை வாழ்த்தும். பெட்ரோலுக்கான வரிவிதிப்பை குறைப்பதனால் ஏற்படும் இழப்பினை சரிக்கட்ட ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கான வரி விதிப்பினை அதிகரிக்கலாம்.

- மாற்று ஏற்பாடு எங்கே?
எரிபொருள் பிரச்சனையைத் தீர்க்க என்னதான் பாரதூரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் வேகமாக வளரும் ஒரு நாடு மாற்று எரிபொருள் குறித்த திட்டங்களை ஏற்படுத்தாவிட்டால் பெரும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பிரேசில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது வாகனங்களுக்கு எரிபொருளாக ‘எத்தனால்’ பயன்படுத்தினர். நம்நாட்டிலும் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வாகனங்களின் என்ஜின்களுக்கு 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தலாம். அமெரிக்காவில் கூட எத்தனால் 85 என்ற பெயரில் வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பங்க்குகளில் 85 சதவீதம், எத்தனால் 15 சதவீதம் பெட்ரோல் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு வாகனங்களின் என்ஜின்களில் சிறு மாற்றங்களை செய்தால் போதும். இதில் பாராட்டக்கூடிய அம்சம் என்னவெனில் எத்தனால் எரிபொருளால் ஓடும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
- மக்கள் புரட்சியும் மந்தை ஆட்டு புத்தியும் தாங்க முடியாத விலை ஏற்றத்தில் சீற்றமடைந்த மக்களை திசைதிருப்ப செயற்கையாக பெட்ரோல் மற்றும் டீசல் பஞ்சத்தை ஏற்படுத்தி பெட்ரோல் பங்க்குகளை மொய்க்கும் வண்ணம் திசைமாற்றிவிட்ட அவலத்தை என்ன செய்வது?
விண்ணை மட்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தினால் சீற்றமடைந்த மக்கள் ஆள்வோரை எதிர்த்து போராடத்தானே முடியும். - இரட்டை வேடம் போடும் சில அரசியல் கட்சிகள்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறோம் என பெயரளவில் சில கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இவைகள் மத்தியில் ஆளும் கட்சியில் இருந்துகொண்டே வேடம் போடுகின்றன. விலையை பெயரளவிற்கு குறைத்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயல்படுகின்றனர். விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென மமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனால் புறக்கணிக்கப்பட்டது எதனால்?
இந்தியாவில் 560 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் 46 பெரிய சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத ஆலைகளை சர்க்கரை உற்பத்தி செய்யப்படாத காலங்களில் எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால் இந்தியா ஓரளவு நெருக்கடியில் இருந்து மீளலாம்.
ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என்பது நிபுணர்களின் கணிப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் மலிவு விலையில் விற்கப்பட்டது. இதனால் அம்பானிகளின் பெட்ரோலிய கொள்ளை லாபத்தை பாதிக்கும் என்பதால் மன்மோகன் அரசால் ஆழக்குழிதோண்டி புதைக்கப்பட்டது. எத்தனால் எரிபொருள் எதனால் புறக்கணிப்பட்டது என்பது புரியும்தானே?



Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 புதுடில்லி: "ஸ்பெக்ட்ரம் விலை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், அனைத்து மொபைல் போன் சேவைக் கட்டணங்கள் இரு மடங்காக அதிகரிக்கப்படும்' என, சேவை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. புதிய ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ள நிலையில், அவை அதிக விலைக்கு ஏலம் விடப்படும் பட்சத்தில், மொபைல் போன் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். டில்லியில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, பார்த்தி ஏர்டெல் முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சய் கபூர் உட்பட பல நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர். ஸ்பெக்ட்ரம் விலை அதிகரிக்கும் பட்சத்தில், மொபைல் போன் கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அமைச்சரிடம் தெரிவித்தனர். பின்னர், பார்த்தி ஏர் டெல் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சய் கபூர் கூறுகையில், "அமைச்சரிடம் இரு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினோம். இந்தியாவில் ஒரு மண்டலத்தில் நிர்ணயித்துள்ள ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விலைக்கும், பிற பெருநகரங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை 100 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், மொபைல் போனுக்கான கட்டணம் இருமடங்காக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிமிடத்திற்கு 2 பைசா என கருதி வருகிறது. ஆனால், விலை அதிகரிக்கப்படும்போது, நிமிடத்திற்கு 30 பைசா வரை உயரும் வாய்ப்புள்ளது' என்றார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Gps Enabled Bus E Tickets Soon Tamil Nadu  சென்னை: சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் 110வது விதியின்கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

மக்களை இணைப்பதிலும்; நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி இன்றியமையாததாக விளங்கும் சாலைப் போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு அளித்து வரும் அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதும்; அதன் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதும் அவசியமாகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளை இயக்குகின்ற 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் உடல் தகுதியினை அறிந்து, உடல் நலக் குறைவு ஏதேனும் இருப்பின் அதற்கான மருத்துவ வசதி பெற்றுக் கொள்ளும் வகையில், சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண்டுக்கு ஒரு முறை “முழு உடல் பரிசோதனை” செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்போது கருணை அடிப்படையில் பணிபுரிந்து வரும் 338 வாரிசுதாரர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டு அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்பதையும்; பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 பணியிடங்கள் என்ற அடிப்படையில், 400 தொழில்நுட்ப காலி பணியிடங்கள் தொழில்நுட்ப பணி அல்லாத பழகுநர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி அளித்து நிரப்பப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்றும், ஓய்வூதியப் பயன்களை பெறாத தொழிலாளர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 47 கோடியே 71 லட்சம் ரூபாய் இந்த மாதத்திலேயே வழங்கப்படும்.

இதே போன்று, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள 4,688 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 96 கோடியே 57 லட்சம் ரூபாய் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வழித் தடப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, 31.3.2013 வரை ஓய்வு பெறவுள்ள பணியாளர்களின் பணியிடங்களையும் உள்ளடக்கி, 6,910 ஓட்டுநர்கள், 7,402 நடத்துநர்கள் மற்றும் 2,349 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்தப் பணியிடங்களில், 4,511 பதிலி ஓட்டுநர்கள், 4,558 பதிலி நடத்துநர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 9,157 பதிலிப் பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள்.

அரசுத் துறையின் அனைத்து வாகனங்களையும் பராமரித்து வரும் அரசு மத்திய தானியங்கி பணிமனை தனது பராமரிப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில், மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 398 தொழில்நுட்பப் பணியிடங்கள் மற்றும் 171 பிற பணியிடங்கள் என மொத்தம் 569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

பயணிகள் எளிதாக பயணச் சீட்டினை பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களைப் (GPS) பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை அனைத்து பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களால் 300 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் தொலைதூர வழித்தட இயக்கத்தினை சீரமைக்கும் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், தொலைதூர வழித் தடப் பேருந்துகள் இனி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும். இதன் காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தடப் பேருந்துகளின் எண்ணிக்கை 905-லிருந்து 1,761-ஆக அதிகரிக்கப்படுவதை அடுத்து, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்பதையும்; கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பொது மேலாளர் அலுவலகம் ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்ற அளவிற்கு பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களால் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும்.

எனது அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் சேவை மேலும் செம்மையுறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati