- By ADIRAI PLUS
-
Postado திங்கள், 16 ஜூலை, 2012
at 10:09:00 AM
லாகூர்:குழந்தை பெரிய முகத்துடன் பிறந்ததால், அதை உயிரோடு புதைக்க முயன்ற தந்தையை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கனிவால் நகரத்தை சேர்ந்தவர் சந்த்கான். இவருக்கு, ஏற்கனவே, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம், இவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை, பெரிய முகத்துடன் இருந்ததால், அதை அவலட்சணமாக கருதிய சந்த்கான், மனைவிக்கு தெரியாமல், குழந்தையை எடுத்துச் சென்று புதைக்க முடிவு செய்தார்.மசூதிக்கு எடுத்துச் சென்று, இறுதிச் சடங்கு செய்த போது, குழந்தை திடீரென அழுதது. இதைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் போலீசுக்கு புகார் செய்தனர். "குழந்தை அவலட்சணத்துடன் பிறந்ததால், அதை புதைக்க நினைத்தேன்' என, சந்த்கான் தெரிவித்துள்ளார். அவர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment