வேலூர்: வேலூரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றார். ஆனால் அதில் 3 குழந்தைகள் இறந்துவிட்டன.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் மனைவி பானுப்பிரியா. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று காலை பிரசவ வலி எடுத்ததையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குமரேசன் சேர்த்தார்.
அங்கு சுகப்பிரசவத்தில் பானுப்பிரியாவுக்கு அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அடக்கம். ஆண் குழந்தைகள் 740 மற்றும் 610 கிராம் எடையுடன் பிறந்தன. பெண் குழந்தைகள் 540 மற்றும் 590 கிராம் எடை கொண்டதாக இருந்தன. குழந்தைகள் எடை குறைவாக பிறந்ததால் பிறநதவுடன் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை இறந்தன. 740 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை மட்டும் இன்குபேட்டரில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்த செய்தி அறிந்த குமரேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து டாக்டர் கூறுகையில்,
ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தைகளை பெற்றெடுப்பது அரிதாகும். கடந்த வாரம் கூட ஒரு பெண் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்துவிட்டன.
கருவறையில் போதிய இடம் இல்லாததால் குழந்தைகள் வளர முடியாமல் எடை குறைவாகப் பிறக்கின்றன. எனவே, கர்ப்பிணிகள் துவக்கத்திலேயே ஸ்கேன் செய்து பார்த்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment