பாரிமுனை பூக்கடையில் உள்ள தங்கசாலை (மின்ட்) தெருவில் இருந்து ராஜாஜி சாலை வரையுள்ள என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 வாரத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட மன்னார்சாமி கோவில் தெருவில் பஸ்கள் செல்லும் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. 9 கடைகள் அகற்றப்பட்டன. கடைகளின் முன்பகுதியை இடிக்க கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இன்று ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி உதவி கமிஷனர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் குவிக்கப்பட்டனர். ராயபுரம் மண்டல அதிகாரி திருமங்கை ஆழ்வார், என்ஜினீயர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பிளாட்பாரம் மற்றும் ரோட்டோரம் கடை நடத்துபவர்களுக்கு இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து இருந்ததால் அவர்கள் கடைகளை இயக்கவில்லை. சில தள்ளு வண்டிகளையும், டீ கடைகளையும் அதிகாரிகள் அகற்றினார்கள். என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் 20 தெருக்களின் முறைகளின் வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும், பொதுமக்கள் வசதிக்காகவும் கடைகள் முன்பு இருந்த போர்டுகளை அகற்றப்பட்டன.
ஆனால் தெருக்களின் உட்புறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள். ஐகோர்ட் எதிரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபார மரப்பலகை பெட்டியை மறைத்து வைத்து இருந்தனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்டிங்கர் தெரு பிளாட்பாரத்தில் 7 சிறிய கொட்டகை போடப்பட்டு இருந்தது. அதில் 2 கொட்டகை அகற்றப்பட்டது. மீதியுள்ள கொட்டகையை அகற்ற அங்கு தங்கி இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எங்களுக்கு ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் குடியிருப்பதாகவும் கூறினார்கள். இதனால் 5 கொட்டகை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 வாரத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட மன்னார்சாமி கோவில் தெருவில் பஸ்கள் செல்லும் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. 9 கடைகள் அகற்றப்பட்டன. கடைகளின் முன்பகுதியை இடிக்க கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையே கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இன்று ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி உதவி கமிஷனர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் குவிக்கப்பட்டனர். ராயபுரம் மண்டல அதிகாரி திருமங்கை ஆழ்வார், என்ஜினீயர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் பிளாட்பாரம் மற்றும் ரோட்டோரம் கடை நடத்துபவர்களுக்கு இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்து இருந்ததால் அவர்கள் கடைகளை இயக்கவில்லை. சில தள்ளு வண்டிகளையும், டீ கடைகளையும் அதிகாரிகள் அகற்றினார்கள். என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் இருக்கும் 20 தெருக்களின் முறைகளின் வாகனங்கள் செல்வதற்கு வசதியாகவும், பொதுமக்கள் வசதிக்காகவும் கடைகள் முன்பு இருந்த போர்டுகளை அகற்றப்பட்டன.
ஆனால் தெருக்களின் உட்புறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள். ஐகோர்ட் எதிரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபார மரப்பலகை பெட்டியை மறைத்து வைத்து இருந்தனர். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்டிங்கர் தெரு பிளாட்பாரத்தில் 7 சிறிய கொட்டகை போடப்பட்டு இருந்தது. அதில் 2 கொட்டகை அகற்றப்பட்டது. மீதியுள்ள கொட்டகையை அகற்ற அங்கு தங்கி இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எங்களுக்கு ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் குடியிருப்பதாகவும் கூறினார்கள். இதனால் 5 கொட்டகை அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.











Leave a comment