அமெரிக்கா விசா பெறுவதற்கு இனி நேர்காணல் கிடையாது 
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலர் அந்நாட்டு விசா எடுத்து அங்கு பணி செய்தோ அல்லது வசிக்கவோ செய்கின்றனர். அவர்கள் தங்களின் விசா முடிவுறும் காலத்தைப் பொறுத்து புதுப்பித்து வருகின்றனர்.
 
அதன்படி, பி1, பி2, சி மற்றும் டி பிரிவு விசாவில் சென்றுள்ளவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது விசாவினை புதுப்பித்து வருகின்றனர். அவர்கள் விசாவை புதுப்பிக்கும்போது நேர்காணல் இருக்கும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விசா புதுப்பிக்கப்படும்.
 
ஆனால் இந்த முறை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக துணைத்தூதரக விவகாரங்கள் துறையின் உதவி செயலாளர் ஜானிஸ் ஜேக்கப் கூறியுள்ளார். மேலும், இந்த புதிய முறை வர்த்தகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு பொருந்தும்.
 
இந்த புதிய முறை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் கூறினார்.
நன்றி 
தினகரன். 

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment