ரஷியாவில் விமானம் வெடித்து 29 பேர் பலி


ரஷியாவில் விமானம் வெடித்து 29 பேர் பலி
ரஷ்ய நாட்டில் உள்ள ரோஷினா விமான நிலையத்தில் இருந்து ஒரு பயணிகள் விமானம் சர்கட் என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றது. 2 என்ஜின்கள் கொண்ட ஏ.டி.ஆ.-72 என்ற அந்த விமானத்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 39 பேர் பயணிகள். 4 பேர் விமான ஊழியர்கள்.
 
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடுவானில் விமானம் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர சத்தத்துடன் நெருப்பு பந்து போல விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 29 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
 
பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் தவிர 12 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் டியூமனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தகவலை ரஷிய அவசர கால பிரிவு அமைச்சகம் தெரிவித்துள்து. மேலும் விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment