உலகிலேயே மிகச்சிறிய பச்சோந்தியை(பல்லி இனவகை) உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பச்சோந்திகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடலின் நிறத்தை மாற்றும் வல்லமை உடையது. மடகாஸ்கர் நாட்டில் உள்ள காடுகளில் ஜெர்மன் உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய உயிரினங்களை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது 18 மில்லி மீட்டர் உயரமே கொண்ட பச்சோந்திகள் அந்த காடுகளில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே இதுதான் சிறிய பச்சோந்தி என்பது குறிப்பிடத்தக்கது.











Leave a comment