கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் உட்பட, போராட்டக்கார்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆயினும் கூடங்குளம் விவகாரத்தில் வெவ்வேறு வடிவத்தில தொடரும் என உதயகுமார் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்திலுள்ள பிரச்சனைகளை பற்றி 9 சர்வதேச அமைப்புகளுக்கு புகார் தெரிவிக்கப்படும் என உதயகுமார் கூறினார். மேலும் இதுதொடர்பாக, சர்வதேச அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்துக்கும் புகார் அனுப்பி வைக்கப்படும் என உதயகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய உதயகுமார், சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பட்ட புகரால் பலன் கிடைக்கும் என தான் நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாலும், அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உதயகுமார் கூறியுள்ளார்.
nanri











Leave a comment