அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி துறைமுக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மறவக்காடு வாய்க்கால் மீன்பிடி மீனவ சங்க தலைவர் சங்கர், தமிழக மீன்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினம், மறவக்காடு, தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் அலையாத்தி காடுகள் வழியாக 200க்கும் மேற்பட்ட கடல் வாய்க்கால்கள் உள்ளன.
இந்த வாய்க்கால் மீன்பிடிப்பு ஆங்கிலேயர் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகிறது. கடலிலிருந்து அலையாத்தி காடுகள் வழியாக கடல்நீர் வருவதால் காட்டில் புதிதாக நடப்பட்ட அலையாத்தி மற்றும் இதர செடிகள் செழித்து வளர்வதற்கு உறுதுணையாக உள்ளது. அதோடு மீனவர்கள் இந்த வாய்க்கால் மூலம் வரும் மீன்கள், இறால்கள், நண்டுகள் ஆகியவற்றை பிடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த வாய்க்கால்கள் தற்போது தூர்ந்து வருகிறது. அப்படி வருவதால் கடல்நீர் வருவது தடைபடும். இதனால் மீன்வரத்து குறைவாக உள்ளது.
ஆதலால் மீன்பிடி வாய்க்கால்களை தூர்வாரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
நன்றி
தினகரன்

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment